கீவ்: மேற்கு உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 54வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ், செர்னிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் நிலை குலைந்துள்ளன. இந்த போரில் பொதுமக்கள், இருதரப்பு ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மேற்கு உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, முக்கிய நகரமான லிவிவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. லிவிவ் நகரில் ரஷ்ய ராணுவம் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பிற நகரங்களை ஒப்பிடும்போது லிவிவ் நகரில் தாக்குதல் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது லிவிவ் நகர் மீதும் ரஷ்யா தாக்குதலை... விரிவாக படிக்க >>