கடைசியில் ஜகா வாங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் நிர்வாக குழுவில் சேர மறுப்பு..!! டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக மாறிய எலான் மஸ்க் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்வது பற்றித் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகக் குழுவில் சேர்க்க முடிவு செய்தார். டிவிட்டர் சிஇஓ டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் தனது டிவிட்டர் பதிவில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேரும் வாய்ப்பை மறுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் நிர்வாகக் குழுவில் சேர்ந்து புரட்டிப்போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மஸ்க் எடுத்த முடிவு அதிர்ச்சியாக உள்ளது. பராக் அகர்வால் இதுகுறித்து பராக் அகர்வால், டிவிட்டர் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் சேர்வது பற்றிப் பல முறை ஆலோசனை செய்துள்ளோம், இணைந்து பணியாற்றுவதில் இருக்கும் பிரச்சனைகளைக் களைந்து நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இணைய இடம் அளிக்கப்பட்டது. இதற்...
கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்! முதல்வர் அறிவிப்பிற்கு பிற கட்சிகள் வரவேற்பு இன்று தமிழக பேரவையில், 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், "இதுதான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால் அந்த அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் ஆவார். தமிழகத்தில் மட்டுமல்ல பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் தலைவர் கலைஞர் ஆவார். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் " என முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் அவர், " சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கம்பீர தோற்றத்துடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை நிறுவப்படும் " என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு ஆதரவு தெரிவித்து பிற உறுப்பினர்கள் பேசினர். வேல்முருகன் பேச்சு : 60ஆண்டு காலம் மாமன்றத்திலும், 19ஆண்டு காலம் முதல்வராகவும், உலக தமிழர்களின் உரிமை குரலாகவும் தலைவர் கலைஞர் அவருக்கென்றே எடுத்த அற்புதமான சொற்களாக உள்ளது...
இந்த வயசிலும் செம்ம குத்தாட்டம் போடும் கனிகா மற்றும் டிடி அக்கா ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இந்த படத்தை மணிரத்தினத்தின் உதவியாளர் இயக்குனர் சுசி கணேசன் இயக்கி உள்ளார். கனிகா கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளரான டிடிவின் அக்கா ப்ரியாதர்ஷினி தற்போது சீரியில்களில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் ஒளிப்பரபாகும் நம்மவீட்டு பொண்ணு தொடரில் கதாநாயகியின் அத்தையாக நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கனிகா மட்டும் ஆட்டம் போடாமல் டிடி அக்கா ப்ரியதா்ஷினி மற்றொரு சீரியல் நடிகை மூன்று பேரும் சேர்ந்து விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் பாடலான ஜாலியோ ...
Comments
Post a Comment