ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA


ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA


ரயில்வே ஊழியர்களுக்கு DA விகிதம் 189 சதவீதத்திலிருந்து 196 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஜூலை 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும், இதேபோல் ஜனவரி 1 2022 முதல் அகவிலைப்படி அளவீடு 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு அமலாக்கம் செய்யப்படுகிறது என ரயில்வே அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்தது.

ரயில்வே நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு DA கொடுப்பனவை தலா 7 சதவிகித்தை இரண்டு பகுதிகளாக அறிவித்துள்ளது. ஆதாவது 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் தனியாக 7 சதவீத உயர்வும், ஜனவரி 1 2022 முதல் தனியாக 7 சதவீத உயர்வும் அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த முறை DA அளவு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. 14 சதவீத உயர்வு மூலம் ரயில்வே ஊழியர்களுக்கு 203 சதவீதம் DA கொடுப்பனவை அளிக்கிறது மத்திய அரசு. ஜனவரி 1, 2022 முதல் அகவிலைப்படி உயர்வும் நடைமுறைக்கு வரும்.

 

மேலும் நவம்பர் 18, 1960 மற்றும் டிசம்பர் 31, 1985 க்கு இடையில் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற CPF பயனாளிகளுக்குச் சமீபத்தில், மத்திய அரசு அகவிலை நிவாரண அளவீட்டை 368 சதவீதத்திலிருந்து 381 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது எனப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது DA நிலுவைத் தொகை தற்போது வழங்கப்படாது என்று சில நாட்களுக்கு முன்பு வெளியான அறிக்கையில் மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

நிலுவை

ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகியவற்றுக்கான அகவிலைப்படி, அகவிலை நிவாரணத் தொகையைக் கோவிட் தொற்று பாதிப்பால் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

Comments

Popular posts from this blog