தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு713789846


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு


சென்னை,

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

10.06.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, நெல்லை, கிருஷ்ணகிரி,தருமபுரி, திருப்பத்தூர்,வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,புதுக்கோட்டை,தஞ்சாவூர், சிவகங்கை, திண்டுக்கல்,தேனி,மதுரை, விருதுநகர்,நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog